இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினர் மற்றும் சிறுவர் சிறுமிகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி குஜராத்தின் அம்ரேலி நகரில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சாக்ஷி ரஜோசரா(15) நேற்று முன் தினம் தேர்வு அறைக்குள் நுழையும்போது மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஏற்கனவே மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.