NPS என்பது அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக தனி நபர்கள் தங்களது ஓய்வுக்கு பின் ஒரு நிலையான வருமானத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.50,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்பினால், நீங்கள் தினமும் ரூ.200 முதலீடு செய்ய வேண்டும்.

NPS திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்புவோர் தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (என்பிஎஸ் ட்ரஸ்ட்) இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்யவேண்டும். இதற்குரிய பதிவு செயல் முறையை நிறைவு செய்ய மக்களுக்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ் (பிஓபி) (அ) பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்- சர்வீஸ் புரோவைடர் (பிஓபி-எஸ்பி) உதவிகரமாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு வரிச்சலுகைகள், நெகிழ்வுத்தன்மை மற்றும் நிதிகளின் தொழில்முறை மேலாண்மை ஆகிய நன்மைகள் கிடைக்கப்பெறும்.