தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும் கல்வி கடன் முகாம் விரைவில் நடைபெற உள்ளது. சேலம் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு தொகுதி மாணவர்கள் 9865253932 என்ற எண்ணிலும், வீரபாண்டி, ஓமலூர் மற்றும் எடப்பாடி பகுதி மாணவர்கள் 9043574387 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என எம்பி பார்த்திபன் கூறியுள்ளார்.