குஜராத் மாநிலத்தில் சோம்நாத் என்ற நகரில் சிங்கம் ஒன்று மாட்டை வேட்டையாட முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காரில் குழுவாக பயணித்துக் கொண்டிருந்தவர்கள் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். வீடியோவில் சாலையில் மாட்டின் கழுத்தை பத்திரமாக பிடித்துக் கொண்ட சிங்கம் ஒன்று கடிக்க முயற்சி செய்துள்ளது. அப்போது சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு மாடு எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை.

அப்போது அந்த வழியாக வந்த விவசாயி ஒருவர் சற்றும் யோசிக்காமல் சிங்கத்தை விரட்டியுள்ளார். முகத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் சிங்கத்தின் அருகே சென்றதும் பயந்துகொண்டு சிங்கம் விலகிச் சென்றது. அதன் பிறகு அந்த மாடும் காப்பாற்றப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் விவசாயின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.