புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது ரயில்வே போலீஸ் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நடந்து வந்து குறித்த பயணிகள் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவரின் மனிதாபிமானமற்ற செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்த காட்சியை புனையவின் மண்டல ரயில்வே மேலாளர் இந்து துபேயின் கவனத்திற்குச் சென்ற நிலையில் இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்று தெரிவித்துள்ளார். பயணிகள் தூங்குவது மற்றவர்களுக்கு ஒரு வேலை சிரமத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கூட அதற்காக இவ்வாறு நடத்துவது நியாயம் கிடையாது என்று பலரும் கண்டித்து வருகிறார்கள்.