இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கூட மகா சிவராத்திரி விழாவை தமிழக கோவில்களில் நடத்தி வருகிறது. இப்படி ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளிற்காக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளன.

அதே போல இறைவனை தரிசிக்க தமிழக அரசு மகாசிவராத்திரி திருநாளான மார்ச் 8-ந் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்க வேண்டும். பக்தர்கள் புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.