புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் நேரடியாக தொடர்புடைய இரண்டு பேர் மற்றும் சந்தேக வட்டத்தில் உள்ள ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு மார்ச் 2ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் இளைஞர் விவேகானந்தன், வைக்கோல் புதர் அருகே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த முதியவர் கருணாஸ், சிறுமியை சமாதானம் செய்வதாகக் கூறி அவரது கை, கால்களைக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் வாயை மூடியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடலை வேட்டியில் கட்டி வாய்க்காலில் வீசியுள்ளனர்.