புதுச்சேரியில் 9 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய இரண்டு பேர் மற்றும் சந்தேக வட்டத்தில் உள்ள ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.