தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து முழுமையாக மழை நீர் வடிந்த பிறகு பொதுமக்கள் உள்ளே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் துணிகளுக்குள் பாம்பு மற்றும் பல்லிகள் உள்ளிட்டவை உள்ளதா என்று சோதித்து பார்க்கவும். மழைநீர் மூழ்கிய சிலிண்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கழிவறையை பேச்சின் பவுடர் மற்றும் ஆசிட் மூலம் கழுவி சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தவும். எலக்ட்ரீசியன் மூலம் சரிபார்த்த பிறகு மின்சாதன பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.