சென்னையில் பெய்த தொடர் கனமழையால். பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கே அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை வினோதினி, “வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

ஆளும் கட்சியான திமுகவை கேட்காமல், பக்கத்துக்கு வீட்டுக்காரனையா கேட்க முடியும்?. இந்த சூழலில் அதிமுகவோ, பாஜகவோ தமிழகத்தில் ஆட்சி நடத்தியிருந்தாலும் கேட்க தான் செய்வோம்” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.