மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது.

இந்த நிலையில், புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் கடன் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்