தெலுங்கானா மாநிலத்தில் பயனாளிகளுக்கு புதிய ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகளை விநியோகம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் இந்த கார்டுகள் பயனாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆரோக்கிய ஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஒவ்வொரு பயனாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு டிஜிட்டல் கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஆதார் கார்டு மூலமாக ஒவ்வொரு பயனாளர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் கேஒய்சி ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனுள்ளாளர்களுக்கு ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகள் வழங்கப்படும் போது பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படாது எனவும் முக அடையாள மூலமாக அடையாளம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.