மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவுகளிலும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அறுவைக்கு பிந்தைய நோயாளிகளுக்கான வார்டுகளிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது