இந்தியாவிலேயே எந்தவொரு மாநில அரசும் செய்யாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அதிரடி நடவடிக்கையாக, முஸ்லிம் பெண்களுக்கான முழுமையான கட்டணச் சலுகைத் திட்டத்தைத் தவெக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் மாதாந்திர உதவித்தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ள நிலையில், இந்த புதிய கல்வி உதவியும் இணைந்து மாணவிகளின் உயர் கல்விப் பயணத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும்.

மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் போன்ற உயர்கல்விப் படிப்புகளுக்குக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால், பொருளாதாரச் சூழல் காரணமாகப் பல மாணவிகள் தங்களுக்குப் பிடித்தமான படிப்புகளைத் தவிர்க்கும் நிலை இருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் முழுமையான கல்விக் கட்டணம் அரசால் ஏற்கப்படுவதால், திறமை இருந்தும் பணத் தடையால் நின்ற ஏழை எளிய மாணவிகள் தங்களின் மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கனவுகளை எளிதில் நனவாக்கிக் கொள்ள முடியும்.

மத்திய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கான சில முக்கிய கல்வி உதவித்தொகை திட்டங்களை நிறுத்தியுள்ள இத்தகைய சூழலில், தமிழக அரசு இந்த இடைவெளியை நிரப்பி ஏழை மாணவிகளின் கல்வித் தடையை நீக்கியுள்ளது.

“>

 

நிதி நெருக்கடியால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவதைத் தடுத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்தச் சமூக நலத் திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.