கிராமத்தில் மருத்துவப் பணி செய்துவரும் டாக்டர் ஒருவரின் கிளினிக்கிற்குள் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் நோயாளிகளைச் பரிசோதித்து வந்த டாக்டர், மருத்துவப் பெட்டியைத் திறந்தபோது உள்ளே பதுங்கியிருந்த ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று சீறியபடி அவருடன் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
பெட்டிக்குள் பாலிதீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த அந்த இந்திய நாகப் பாம்பு, தனது படத்தை விரித்து இரையைத் தேடுவதுபோல் காத்திருந்துள்ளது. மருத்துவரின் நல்ல காலம் நல்வாய்ப்பாக அவர் உடனடியாக உஷாரடைந்ததால், எந்தவித உயிர் சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
உடனடியாக வனவிலங்கு மீட்புக்குழுவினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து வந்த அவர்கள் அந்த விஷப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.
आज तो डॉक्टर साहब के पास नागराज जहर की पुड़िया लेकर स्वयं इलाज करवाने आ गए थे .. 😱
डॉक्टर साहब अपने क्लीनिक पर मरीजों को देख रहे थे और दवाई निकालने के लिए जैसे ही बॉक्स खोला तो साक्षात यमराज के दर्शन हो गए।
दवाई के बॉक्स के अंदर पॉलीथिन बैग में लिपटे हुए indian spectacled… pic.twitter.com/GoReV9rnTD
— Rakesh Patidar (@RakeshP38298981) August 30, 2026
“>
பருவமழை காலங்களில் ஊர் மற்றும் வீடுகளுக்குள் பாம்புகள் வருவது இயல்பு என்பதால், பொதுமக்கள் யாரும் அறிமுகமில்லாத இடங்களுக்குள் கையை விடுவதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
