உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு மனைவி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பவன் தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. மனைவி கோழிக்கறிசமைக்காததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.