சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ரயில்வே நிலையக் காணொளி, பார்ப்பவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட்ட நிலையில், மேலே ஏற முடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் உதவி கேட்டுத் துடித்தும் கூட, ஒருவர்கூடக் கைகொடுக்க முன்வரவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி.
The fact he asked for help and nobody responded really makes me lose faith in humanity 😞 pic.twitter.com/xkoCkKpSiF
— Banned Vids (@VidsBanned) December 25, 2025
ரயில் எப்போது வருமோ என்ற அச்சத்தில் அந்த நபர் மீண்டும் மீண்டும் முயன்று, ஒருவழியாகத் தனது சொந்த முயற்சியிலேயே பிளாட்பாரத்தின் மேலே ஏறிவிட்டார். மனிதநேயம் மரித்துப் போய்விட்டதா என்று கேட்கத் தோன்றும் இந்தச் சம்பவம், நவீன உலகின் சுயநல முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது, அதைக் காப்பாற்றுவதை விட வீடியோ எடுப்பதிலும், வேடிக்கை பார்ப்பதிலுமே மக்கள் ஆர்வம் காட்டுவது சமூகத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
