இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், இங்குள்ள பிச்சை எடுக்கும் முறையை ஒரு பெரிய “நெட்வொர்க் ஸ்கேம்” (Network Scam) என விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஒவ்வொரு சிக்னலிலும் குழந்தையை கையில் வைத்திருக்கும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பினர் திட்டமிட்டு பிச்சை எடுக்கிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகளைக் கண்டால் அதிக பணம் கேட்டுத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
"Network of beggars in India."❌🇮🇳
"Women with babies, boys, transgenders; every stop has different characters."
An American tourist mocked and raised concerns about the begging scam in India.
They keep following foreigners for more money. The govt must stop this scam network. pic.twitter.com/sWmWzR0Nwh
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 27, 2025
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட வறுமை அல்ல, மாறாக ஒரு கும்பலாகச் சேர்ந்து நடத்தப்படும் மோசடி வலைப்பின்னல் என்று அந்த சுற்றுலாப் பயணி சாடியுள்ளார். இந்தியாவின் பிம்பத்தைச் சர்வதேச அளவில் இது போன்ற சம்பவங்கள் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இந்த மோசடி நெட்வொர்க்கை முடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதைப் பார்த்த பல நெட்டிசன்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் மரியாதையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
