மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடி ஊழியரை நோக்கி ஒரு கார் மோதிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெள்ளை நிற கார் ஒன்று சுங்கச்சாவடியில் இருந்து திடீரென வேகமாக பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் சுங்கச்சாவடி ஊழியர் தரையில் விழுந்து காயமடைந்த காட்சி தெளிவாக காணப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் உடனே தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “மனிதநேயம் எங்கே போயிற்று?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.