இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது. சில விதிவிலக்கான சூழலில் மட்டுமே விருது பெற அனுமதிக்கப்படும். விருது தரும் நிறுவனங்கள் குற்றமற்றது என்பதற்கான சான்று தேவை போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.