இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மூன்று வருடங்களாக காத்திருந்த நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள அகலவிலைப்படி தொகையை வழங்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் பிட்மென்ட் பேட்டரையும் மத்திய அரசு அதிகரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே 18 மாதம் நிலுவை தொகை மற்றும் பிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் வங்கி கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரை வரலாம் என கூறப்படுகிறது