தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தபோது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கி ஜாமின் பெற்றுக் கொள்ள ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதாவது பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்..