தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தபோது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கி ஜாமின் பெற்றுக் கொள்ள ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதாவது பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்..
மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more