மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக 15 வருடங்களுக்கு மேல் செயல்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.