மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக 15 வருடங்களுக்கு மேல் செயல்பட்டுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் “என் நண்பர் கருமுத்து கண்ணன் காலமாகிவிட்டார். அனைவருக்கும் ஆழ்ந்த ஆறுதல். ஆனால் எனக்கு யார் சொல்வது? கல்வித்தந்தை, தொழிலரசன், சமூக அக்கறையாளர் என்று மரணம் ஒரே கல்லில் பல கனிகளை அடித்து விட்டதே” என்று கூறியுள்ளார்.