தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு‌ வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளை திறந்தால் மாணவர்களின் உடல் நலத்திற்கு உகந்ததாக இருக்காது. எனவே மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.