செப்.17இல் வேலூரில் நடந்த திமுக  முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார். கட்சி பணிக்காக அழைத்துக் கொண்டு போனார் என்பதற்கு பதில், கூட்டிக் கொண்டு போனார் என பேசிவிட்டேன், தேவையற்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பேச்சு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.