உரிமைத் தொகை பெறும் 1.06 கோடி பேருக்கும் CM ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் எழுதி வருகிறார். அதில், இனி மாதம்தோறும் ச1000 உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதி கூறியுள்ள அவர், பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணி நேர உழைப்பு உள்ளது என்றும் அப்படி கணக்கில் கொள்ளப்படாத உழைப்புக்கு அங்கீகாரமே இத்தொகை எனவும் கூறியுள்ளார்