மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அரசு விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிலாது நபி பண்டிகைக்காக வரும் செப்டம்பர் 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனை 28ஆம் தேதிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும்.

இந்த விடுமுறையானது வியாழக்கிழமை வருவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும். அதே போல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி திங்கள்கிழமை வருவதால் தொடந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.