மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே தாருக் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பத்து வயது மகன் முன்னே தந்தையை கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர் கோமுக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.