தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.470 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் 3,53,249 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.500 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.