தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது . இதற்கு மேல் முதல் முறை சிக்கும் கடைகளுக்கு கூட நிரந்தரமாகவே சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.