சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த ஐடி ஊழியர் ரகுராம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.