கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி இளம்பெண் 6 லட்சத்து 16 ஆயிரத்து 239 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி அந்த நபர் பணத்தையும் அதற்கான லாபத் தொகையையும் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.