மக்களவைத் தேர்தலையொட்டி 3 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படையினர் கோவை வந்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ரயிலில் துணை ராணுவ படையினர் கோவை வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் 92 பேர் வீதம் 276 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். கோவை, திருப்பூர், சேலம் ஆகிய 3 மாநகர்களுக்கும் தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படை செல்கிறது.