10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்..

கோடை காலத்தில் மின் தேவையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் காணொளியில் உரையாற்றினார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, தமிழகத்தில் 10 மற்றும் 12 பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய வேண்டாம். பொதுத்தேர்வு முடியும் வரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளக்கூடாது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மின்தடைகள்  ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சீர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.