தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை நடத்தப்பட்ட இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து முகாம்களின் வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அப்போது விண்ணப்பதாரர்கள் கலாய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.