தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கான மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினம் முடிவுற்றது.

இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள். விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.