தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் எஸ்எம்எஸ் வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் கணக்கில் செலுத்தும் பணி இன்று தொடங்கியது.

இந்த நிலையில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. மேலும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.