தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய கட்டணத்தை மகளிர் உரிமை தொகையை கொண்டு நேர் செய்யக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். வங்கிகள் இதனை மீறினால் வேறு வங்கிக்கு திட்ட மாற்றம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் இவ்வாறான பிரச்சனையை எதிர்கொண்டால் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.