தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையின் காரணமாக ஜனவரி மாதம் இந்த தொகை 10 ஆம் தேதியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் இந்த மாதம் முதல் 15ஆம் தேதி தான் பணம் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.