மகரம் ராசி அன்பர்களே,

இன்று சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவது நல்லது. கண்டிப்பாக சந்திராஷ்டமத்தை கருத்தில் கொண்டு பணிகளை எச்சரிக்கையுடன் செய்யுங்கள். மன அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இறை வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பணிகளை மேற்கொள்வீர்கள்.

இன்று பெண்களால் ஏற்பட்ட மனகலக்கம் விலகிச் செல்லும். பெண்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட விரிசல் சரியாகும். தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். கலை துறையில் மிகுந்த ஆர்வம் அதிகரிக்கும். சந்திராஷ்டம முடியும் வரை சிந்தித்து செயலாற்றுங்கள். இந்த நாள் உங்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்க ஏற்படும்.

பயணத்தில் கவனமாக இருங்கள். பெண்கள் இன்று கவனமாக இருங்கள். சேமிப்பு அதிகப்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வார்கள். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்