திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ் மற்றும் சுமித்ரா ஆகியோரை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன்பு எடுத்து வைத்த வீடியோவில், எங்கள் சாவிற்கு காரணம் எனது மகனும் மருமகளும் தான் என்று கூறியுள்ளனர். நாங்கள் இறந்த பிறகு சொத்து அனைத்தும் எங்களது மகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.