சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஷூ வேண்டும் என கேட்டுள்ளார்.

அதனை வாங்கித்தரமுடியாமல் பெற்றோர் தவித்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், கடந்த 14ம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார்.