பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.