உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இந்த போர் தொடர்ந்து நீடித்து கொண்டே செல்கின்றது. இதில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பல்வேறு நாடுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில் டென்மார்க் அரசு உக்ரைனுக்கு f-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ராணுவ மந்திரி டிரோஸ் லண்ட் பால்சன் கூறியதாவது “உக்ரைன் ரஷ்யா போரில் ஒரு கட்டத்திற்கு மேல் போர் விமானங்களின் பங்களிப்பு கட்டாயம் ஆகிறது. எனவே ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனின் தற்காப்புக்கு உதவ f-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.