தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ பேருந்துகளை சிறை பிடிக்கவும் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அரசு இப்படி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.