கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதேபோல், 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகை 3171 கோடியை வழங்கவும் ஆணையிட்டுள்ளார். கொரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்ததற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்