பிரபல நடிகர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனையடுத்து, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும், PS 2 படத்தில் சில மோசமான காட்சிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் தகவல் தெரிவித்துள்ளது.