தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கண்காணிக்க பேருந்து நிலைய நேர கண்காணிப்பாளர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் பேருந்தில் ஏற பயணிகளின் உடைமைகளை கண்காணிக்க நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.